காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த அக். 26ல் தேசியக் கொடியேற்றுவோம்-காஷ்மீர் பண்டிட்டுகள்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்ததன் 63வது ஆண்டையொட்டி வருகிற 26ம் தேதி தேசியக் கொடியேற்றி கொண்டாடுவோம் என காஷ்மீர் பண்டிட்டுகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பானுன் காஷ்மீர் அமைப்பின் நிறுவனரான அக்னி சேகர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்து வருகிற அக்டோபர் 26ம் தேதியுடன் 63 ஆண்டுகள் முடிகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி, தீபமேற்றி கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
ஜம்முவிலும், டெல்லியிலும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதைத் தடுக்க நடந்த சதிகள் குறித்து அப்போது அம்பலப்படுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications