For Quick Alerts
For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது-கூறுகிறார் ப.சிதம்பரம்
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெட்ரோலைத் தவிர மற்ற எரிபொருட்களை எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து மானிய விலையில்தான் விற்று வருகின்றன.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. குறிப்பாக இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் விலையை உயர்த்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தற்போது அரசு ரூ. 300 வரை மானியம் தருகிறது. அதேபோல மண்ணெண்ணைக்கு ரூ. 15 மானியம் வழங்கப்படுகிறது என்றார் ப.சிதம்பரம்.
Comments
Story first published: Sunday, October 24, 2010, 17:20 [IST]