என்எல்சி போராட்டத்தில் நிரந்தர ஊழியர்களும் குதிப்பு- மின் உற்பத்தி ஸ்தம்பிக்கும்
Subscribe to Oneindia Tamil

என்.எல்.சி -யில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 35 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போரத்தில் 13 கட்டமாக பேச்சு வாரத்தை நடத்தியும் எந்வித உடன்பாடும் ஏற்படாததால் போராட்டக் குழுவினர் அனைத்துக் கட்சி எம்பி -க்கள் குழு பிரதமர், நிலக்கரித்துறை அமைச்சர் ஆகியோரை டெல்லியில் சந்தித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினர்.
இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மின் உற்பத்தி முற்றிலும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications