தொழிலாளர்கள் பிரச்சனை: கருணாநிதியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான டி.கே.ரங்கராஜன் எம்பி, செளந்தரராஜன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இச் சந்திப்பு நடந்தது.
நெய்வேலி தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் கருணாநிதி நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அப்போது வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இந் நிலையில் அவரை மார்க்சிஸ்ட் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்புக்குப் பின் ரங்கராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இயங்கக்கூடிய ஹூண்டாய், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நிலவும் பிரச்சனைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதேபோல நெய்வேலி சுரங்கம் மற்றும் மின் நிலைய தொழிலாளர் பிரச்சனை குறித்தும் பேசினோம்.
பொதுவாக, தமிழகத்தில் தொழில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்கான ஒரு சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும் என்று முதல்வரிடம் கோரினோம். அதை அவரும் கனிவுடன் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
நெய்வேலி தொழிலாளர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு கருதுகிறது. அதே உணர்வோடுதான் நாங்களும் இருக்கிறோம். நல்ல முடிவு வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன. அதே சமயத்தில் பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே அனைத்துச் சங்கங்களும் விரும்புகின்றன.
தமிழக அரசும் நெய்வேலி நிர்வாகத்தோடு பேசுகிறோம் என்று சொல்லியிருக்கிறது. எனவே, சுமூகத் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.
கூட்டணி தொடர்பாக ஏதாவது பேசினீர்களா என்று கேட்டதற்கு, அரசியல் சம்பந்தமாக எதையும் நாங்கள் பேசவில்லை என்றார் ரங்கராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications