களக்காடு அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: களக்காடு அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அவருடைய அத்தை வீட்டை விட்டு ஓடினார்.

களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகேஸ்வரி கடந்த 22-ம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனை செல்வதற்காக கணவரிடம் ரூ.500 வாங்கிச் சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவி்ல்லை. என்ன ஆனார் என்றும் தெரியாமல் இருந்தது. தாயைக் காணாமல் குழந்தைகள் தவித்தனர்.

இது குறித்து செல்வம் திருக்குறுக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் முருகேஸ்வரிக்கும், செல்வத்தின் அக்கா மகன் ரூபன் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவருக்கும் அத்தை-மருமகன் உறவு ஆகும்.

ஆனால் காமம் கண்ணை மறைக்க இருவரும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓடிய சம்பவம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+