காமன்வெல்த் ஊழல்: வருமான வரித்துறையினர் ரெய்டு!
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்துள்ள ரூ 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பராக காமன்வெல்த் போட்டி கான்ட்ராக்டர்களான டெல்லியில் உள்ள ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் மற்றும் சத்யபிரகாஷ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காமன்வெல்த் போட்டிக்காக சின்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியை ஷிவ் நரேஷ் ஸ்போர்ட்ஸ் மேற்கொண்டது. மைதானங்களில் தளம் அமைக்கும் பணியை சத்யபிரகாஷ் ஸ்போர்ஸ் செய்தது.
காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின்பேரில், முன்னாள் தலைமைக் கணக்காளர் விகே ஷுங்லு தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications