4% எம்.பிக்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளை சீர்குலைக்கின்றனர்-மீரா குமார்
ராய்ப்பூர்: லோக்சபா எம்.பிக்களில் 4 சதவீதம் பேர் பிரச்சினைக்குரியவர்களாக உள்ளனர். இவர்களால்தான் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார் லோக்சபா சபாநாயகர் மீரா குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்சபாவில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 4 சதவீதம் பேர் தவிர மற்ற அனைவருமே அமைதியாகவும், பொறுப்புடனும் உள்ளனர். கூட்டங்கள் அமைதியாக நடைபெற இவர்கள் ஒத்துழைக்கின்றனர். ஆனால் அந்த 4 சதவீதம் பேர் மட்டுமே அவையை சீர்குலைத்து செயலிழக்கச் செய்கின்றனர்.
இந்த 4 சதவீதம் பேரைத் தவிர மற்ஏற 96 சதவீதம் பேரும் அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கவோ, சீர்குலைக்கவோ விரும்புவதில்லை. விவாதங்களிலும் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.
இருப்பினும் அமளியில் ஈடுபடும் எம்.பிக்களை அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடவோ அல்லது மார்ஷல்களை அனுப்பி வெளியேற்றவோ நான் விரும்புவதில்லை.
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகளை லோக்சபா விதிமுறைகள் தெளிவாக வகுத்துள்ளன. அதன்படியே நான் செயல்படுகிறேன் என்றார் மீரா குமார்.












Click it and Unblock the Notifications