வாக்குகளை வாங்கிக் கொண்டு இஸ்லாமியர்களை திமுக ஏமாற்றிவிட்டது: நாகூர் மீரான் குற்றச்சாட்டு
காயல்பட்டினம்: இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிக நன்மை செய்தது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகரம் சார்பில் அதிமுகவின் 39-வது ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் கலந்து கொண்டு பேசியதாவது,
இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால் இஸ்லாமியர்களின் 90 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டனர்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்திற்கு மணி மண்டபம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. வக்பு வாரியத்திற்கு சென்னையில் தலைமை அலுவலகம் கட்ட ரூ. 1.50 கோடி அதிமுக அரசு தான் ஒதுக்கியது. இப்படி பல்வேறு நன்மைகளை இஸ்லாமிய சமுதாயத்திற்காக அதிமுக செய்துள்ளது.
திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கியதாகக் கூறுகிறார். இதன் மூலம் இஸ்லாமியர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 10 பேர் மருத்துவக் கல்லூரியில் படித்தால் தற்போது வெறும் 3 பேர் மட்டும் தான் படிக்கிறார்கள். எனவே இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஏரல் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications