சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவாரூர்: சாதிச் சான்றிதழ் மறுக்கப்படடதை கண்டித்து ஆதியன் இன பழங்குடி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஆதியன் என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆதியன் இனமக்களின் கோரிக்கையை தமிழக அரசு அலட்சியப்படுத்தி காலதாமதம் செய்து வருகிறது. இதனால் அரசின் பல்வேறு சலுகைகளை இவர்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்கும்வாய்ப்பை முற்றிலுமாக இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதியன் இனமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரம்பரிய இசைக்கருவிகளுடன் இசை முழக்கம்செய்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டத்தில் குதித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்டக் ஆட்சியர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாக உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications