Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமா., சரத் யாதவ் கொடும்பாவிகளை எரித்த இளைஞர் காங். 41 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அழகிய மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் உருவ பொம்மைகளை எரித்த இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த 41 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் ராகுல் காந்தி பற்றி அவதூறாக பேசியதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ராகுலை அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராஜேஸ் குமார் தலைமையில் இளைஞர் காங்கிரசார் அழகிய மண்டபத்தில் சரத்யாதவ், தொல்.திருமாவளவன் உருவ பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்த திடீர் போராட்டத்தில் கலந்து கொண்ட 41 பேரை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+