இந்திரா காந்தி நினைவு நாள்-பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 26வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி சக்தி ஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் தவிர துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பக்திப் பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சிக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் இந்திரா காந்தி சிலைகள், படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியன்று தனது மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா என்பது நினைவிருக்கலாம்.
வல்லபாய் படேலின் 135வது பிறந்த தினம்
இதேபோல இன்று இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 135வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.