ஓசூரில்ரூ. 115 கோடியில் பாரதி என்டர்பிரைசஸின் குளிர்பான ஆலை
ஒசூர்: ஓசூர் அருகே ரூ. 115 கோடி மதிப்பீட்டில் குளிர்பான தயாரிப்பு ஆலை செயல்படத் தொடங்கியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியில் இந்த குளிர்பான ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர பீல்ட் பிரஷ் புட்ஸ் எனும் பதப்படுத்தப்பட்ட உணவும் இங்கு தயாரிக்கப்படவுள்ளது.
பாரதி எண்டர்பிரைசஸ், டெல்மான்ட் பசிபிக் லிமிடட் நிறுவனமும் இணைந்து இதைத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து இதன் நிர்வாக இயக்குநர் ராகேஷ் பாரதி மிட்டல் கூறுகையில்,
ஒசூரில் நிலவும் குளிர்ந்த சூழ்நிலை மற்றும் இங்கு விளையும் தக்காளி, மாம்பழம், காய்கறிகளைப் பயன்படுத்தி 25 ஏக்கரில் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளோம்.
200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் கணினி, தானியங்கி இயந்திரங்கள் உதவியுடன் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்களின் கை படாத குளிர்பானம் இங்கு உற்பத்தி செய்யப்படும்.
இங்கு ஒரு மணி நேரத்தில் 4 டன் பதப்படுத்தப்பட்ட உணவும், ஒரு நாளைக்கு 2,40,000 பாட்டில் மாம்பழச் சாறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தக்காளி சாஸ், மாம்பழச் சாறு, உள்ளிட்ட 86 வகையான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications