தமிழக மீனவர்கள் மீது கல்வீசி இலங்கை கடற்படை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளது இலங்கை கடற்படை.

தமிழக மீனவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பதை பாலிசியாகவை வைத்துள்ளது இலங்கை கடற்படை. கடலுக்குள் மீன் பிடிக்கப் போனாலே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, தாக்கி காயப்படுத்துவது, வலைகளை அறுத்து அனுப்புவது, விரட்டியடிப்பது என தாறுமாறாக செயல்பட்டு வருகிறது இலங்கை கடற்படை.

இந்த நிலையில் தற்போது புதிதாக கல்வீச்சிலும் இறங்கியுள்ளது இலங்கை கடற்படை.

பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளைப் பிடுங்கி பிய்த்து எறிந்துள்ளனர். மேலும், கப்பலில் அவர்கள் வைத்திருந்த கற்களை எடுத்து, மீனவர்களின் மீது எறிந்துள்ளனர்.

இப்படி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது புதிது என்றும், அதிர்ச்சி தரத்தக்கது என்றும் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக கல்வீச்சில் இலங்கை கடற்படையினர் இறங்கியிருப்பது மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+