வேளாங்கண்ணி விடுதியில் தங்கியிருந்த 14 இலங்கை அகதிகள் கைது
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 14 இலங்கைத் தமிழர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா தப்புவதற்காக காத்திருந்தது தெரிய வந்தது.
தமிழக அகதி முகாம்களைச் சேர்ந்த சிலர் ஏஜென்டுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயற்சிப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கியூ பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 14 இலங்கைத் தமிழர்கள் சிக்கினர். அனைவரும் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் தலா ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்து ஏஜென்டு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அந்த ஏஜென்டு இதுபோல ஏராளமான தமிழர்களிடம் பணம் வசூல் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வேளாங்கண்ணி முழுவதும் லாட்ஜுகள், விடுதிகளில் போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.