For Quick Alerts
For Daily Alerts
Just In
சுசீந்திரம்-தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 3 பேர் பலி
நாகர்கோவில்: குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் காத்தமூத்தூர் என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கேட் உள்ளது. நேற்று அந்த ரயில்வே கேட்டை சிலர் கடந்து சென்றனர். அந்த வழியாக குமரியி்ல் இருந்து டெல்லி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வந்தது.
அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற காத்தமூத்தூரைச் சேர்ந்த மணி, ரங்கநாதன் மற்றும் கோலப்பன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பலியாகினர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு ரயில்வே போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, November 4, 2010, 15:40 [IST]