For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி: பூக்கள் விலை கடும் உயர்வு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டியைகை முன்னிட்டு தமிழகத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கனகாம்பரம் ஆகியவை கிலோ ரூ.1,000க்கு விற்பனையாயின.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்கள், வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் விலை அதிகரிப்பது வழக்கம்.

மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.1,000 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல மல்லிகை விலை ரூ.800ககுக் குறைந்தது.

இது போல் பிச்சிப் பூ கிலோ ரூ.650 வரையிலும், கனகாம்பரம் ரூ.1000 வரையிலும் விற்பனையானது. ரோஜாப் பூ கிலோ ரூ. 60க்கும், கிரேந்தி பூ கிலோ 40 முதல் 50 ரூபாய் வரையிலும், வாடா மல்லி ரூ. 20க்கும், கோழி கொண்டைப் பூ ரூ.25க்கும், அரளிப் பூ ரூ. 100க்கும் விற்பனையானது.

துளசி கட்டுகள் ரூ. 5 முதல் 6 வரையிலும், காக்கடைப் பூ ரூ.500க்கும், மரிக்கொழுந்து 100 ரூபாய்க்கும், பன்னீர் பூ கிலோ ரூ.70க்கும், தாமரை மொட்டுகள் ரூ.10க்கும் விற்பனையானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X