மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வென்றால் பிரணாப் முதல்வராகலாம்-மம்தா

ரயில்வே அமைச்சரான மம்தா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன், கூட்டணியின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.
எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசியலிலும் நிர்வாகத்திலும் நீண்ட அனுபவம் பெற்ற பிரணாப் முகர்ஜியே முதல்வராகலாம். இது தான் என் விருப்பம்.
ஆனால் இந்தக் கூட்டணி தொடர வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியின் எந்தத் தலைவரும் என்னை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடனான கூட்டணியை காங்கிரஸ் தான் முறித்துக்கொண்டு தனியாக போட்டியிட்டது. சிலிகுரியி உள்ளாட்சி மன்றத்தை மார்க்சிஸ்டுகளின் ஆதரவோடு காங்கிரஸார் கைப்பற்றினர்.
மேலும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்டுகளுடன் காங்கிரஸ் கை கோர்த்த ன்னுதாரணமும் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசு மத்தியில் அமைந்தபோது இடதுசாரிகள் அந்த அரசை வெளியிலிருந்து ஆதரித்தனர் என்பதை யாரும் மறக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் கூட்டு வைப்பது என்பது மக்களுடைய விருப்பத்தையும் பொறுத்தே அமையும். மக்களின் விருப்பத்துக்கு மாறாக நான் செயல்பட மாட்டேன்.
ஒருவேளை நான் மேற்கு வங்க முதல்வராக நேர்ந்தால், ரயில்வே அமைச்சர் பதவியை எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.
கூட்டணி, அரசியல் தொடர்பாக ராகுல் காந்தியின் பேச்சுகள், பேட்டிகளுக்குப் பதில் அளிக்க நான் விரும்பவில்லை.
அதேநேரம் ராகுல்காந்தி முதலில் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலில் அவர் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். நான் ஒன்றும் சீசனுக்காக வந்து செல்லும் பறவை அல்ல. நான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருடன் அரசியல் நடத்தியவள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
அதே நேரத்தி்ல் ராகுலுக்கும் எங்களுக்கும் சண்டை மூட்டப் பார்க்காதீர்கள். அவர் மேலும் வளர்ந்து பெரிய தலைவராக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ராஜீவ், சோனியா மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் காங்கிரஸ் கட்சி தனிச்சையாக முடிவு எடுக்கவோ, சுயேச்சையாக நடந்து கொள்ளவோ உரிமை உண்டு. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நாங்கள் இந்த மாநில மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படிதான் நடப்போம்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காக எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு தலை வணங்க மாட்டோம் என்றார் மம்தா.












Click it and Unblock the Notifications