பார்வதி அம்மாளை பார்க்க பிரபாகரனின் சகோதர, சகோதரிகளுக்கு இலங்கை அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil

திவயின என்ற சிங்கள ஊடகம் இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தனது குழந்தைகள், குடும்பத்தினரை சந்திக்க விரும்பினார்.
இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்,
பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரத்னம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோரை இலங்கைக்குள் வர அனுமதியளிக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இவர்கள் இலங்கைக்குள் வந்து வல்வெட்டித்துறை பகுதியில் பிரபாகரன் சகாக்களை சந்திக்க உள்ளதாக இலங்கை உளவுப் பிரிவினர் எச்சரித்ததாகவும், இதையடுத்து இவர்கள் இலங்கைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications