தீபாவளி 'முகூர்த்த வர்த்தகம்': 21,000 புள்ளிகளைத் தொட்ட மும்பை பங்கு சந்தை
மும்பை: தீபாவளியையொட்டி நேற்று நடந்த மும்பை பங்குச் சந்தையின் சிறப்பு 'முகூர்த்த வர்த்தகத்தில்', பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்தது.
தீபாவளியன்று பங்குச் சந்தைகள் மூடப்படும் என்றாலும் முகூர்த்த வர்த்தம் நடக்கும். நேற்று சுமார் 75 நிமிடங்களே நடந்த வர்த்தகத்தில் ஹெல்த்கேர், ஆட்டோமொபால்ஸ், வங்கிகளின் பங்குகள் நல்ல விலைக்கு விற்பனையாயின.
பங்குச் சந்தையி்ன் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகளை எட்டியது. முகூர்த்த வர்ததகத்தின் இறுதியின் சென்செக்ஸ் 21,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளை எட்டியது இதுவே முதல் முறையாகும்.
கடந்த தீபாவளிக்குப் பின் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 5,000 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டில் பங்குகளின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications