Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போபால் விஷவாயு-பாதிக்கப்பட்டவர்கள் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

போபால்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போபால் விஷவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

போபாவில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. உலகையே துயரத்தில் ஆழ்த்திய போபால் சம்பவம் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபரும், இன்னாள் அதிபர் ஒபாமாவும் மௌனமாய் இருப்பது ஏன் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

1984ம் ஆண்டு நடந்த போபால் விஷவாயுக் கசிவு தான் உலகத் தொழிற்சாலை வரலாற்றில் நடந்த மோசமான விபத்தாகும். இதில் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயரிழந்தனர். இதற்கு காரணம் யூனியன் கார்பைடு என்னும் அமெரிக்க நிறுவனம். இந்நிறுவனத்தின் மீதும், அதன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு நாங்களும் கடந்த 26 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது குறித்து இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒபாமாவாவது தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்பினோம். ஆனால் அவரும் மற்ற அதிபர்களைப் போல மௌனமாக இருக்கிறார். தற்போது இந்தியா வந்துள்ள ஒபாமா எங்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+