ஸ்ரீவில்லிப்புத்தூர் இலங்கை தமிழர் முகாமில் தீ:120 வீடுகள் எரிந்தன
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இலங்கைத் தமிழர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
மொட்டமலை பகுதியில் இலங்கைத் தமிழர் முகாம் உள்ளது. இங்கு 258 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமில் உள்ள மயூன் ராஜ் என்பவரது வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
காற்று பலமாக வீசியதால் தீ அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவியது. தீயணைப்புப் படையினர் வருவதற்குள் எல்லா வீடுகளும் எரிந்து நாசமாகிவிட்டன. மக்கள் தப்பி வெளியே ஓடிவிட்டதால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முன்னதாக படையினர் தாமதமாக வந்ததாகக் கூறி அப் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications