For Daily Alerts
Just In
தபால் நிலையங்களில் 500 கிலோ தங்க நாணயங்கள் விற்பனை
மும்பை: இந்திய அஞ்சல் துறை தபால் நிலையங்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிலோ அளவுக்கு தங்க நாணங்களை விற்று சாதனை படைத்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமீப காலமாக தங்க நாணயங்கள், தங்க பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பரஸ்பர நிதி திட்டங்களில் இதுவரை 13 டன் தங்கம் மீது முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே போல அஞ்சல் நிலையங்களில், கடந்த 2008ம் ஆண்டு தங்க நாணயங்கள் விற்பனை தொடங்கங்பட்டது. நாடு முழுவதுமாக 700 தபால் நிலையங்களில் தங்க காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் வரையிலான இரண்டு ஆண்டுகளில் 500 கிலோ அளவுக்கு தங்க நாணங்களை அஞசல் துறை விற்று சாதனை படைத்துள்ளது.
Comments
Story first published: Sunday, November 7, 2010, 16:09 [IST]