இந்திய பயணம் என் வாழ்நாளின் பொக்கிஷம்-மிஷேல் ஒபாமா

மகாத்மா காந்தி வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருள்கள், அவர் எழுதிய நூல்கள், அவரைப் பற்றிய நூல்கள், அவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்களை நினைவுகூரும் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இருவரும் பார்த்தனர்.
மும்பை வரும்போதெல்லாம் இந்த மணி பவனில் தான் காந்தியடிகள் தங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையிலேயே இந்த இல்லம் இப்போதும் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லத்தைப் பார்வையிட்ட பின் பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதிய ஒபாமா, இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலகத்துக்கே காந்தியடிகள் நாயகராகத் திகழ்கிறார். நிற வெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களுக்கும் எனக்கும் காந்தியடிகள் தான் வழிகாட்டி என்று எழுதியுள்ளார்.
அவரது மனைவி மிஷேல் எழுதியுள்ள குறிப்பில்,
மகாத்மா காந்திஜி வசித்த வீட்டைப் பார்க்கவும் அவருடைய சத்தியாகிரகப் போராட்டங்களின் தன்மையை உணரவும் இந்தப் பயணம் மிகவும் எனக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறது, இந்தச் சுற்றுப்பயணத்தை என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகவே நான் கருதுகிறேன்.












Click it and Unblock the Notifications