எஸ்ஐ தேர்வு-மனிதநேய பயிற்சி மைய மாணவர்கள் 254 பேர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ. தேர்வில் மனிதநேய ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் இலவசமாகப் பயின்ற 254 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் காலியாகவுள்ள எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. இதில் மனிதநேய மையத்தில் இலவசமாக பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கென அந்ததந்த துறை சார்ந்த நிபணர்கள் குழு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

தகுதிச் சுற்றுகள் முடிந்து இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வில் மொத்தம் 435 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 254 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 45 மாணவிகளும், 209 மாணவர்களும் அடக்கம். இதில் 60 பேர் ஏற்கனவே காவல் துறையில் பணி புரிந்து வருகிறார்கள்.

இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி காலத்தில் தங்கும் வசதி, உணவு, உடை, காலணி, பாடக்குறிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதாக மனிதநேய அறக்கட்டளையின் மாநிலத் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+