For Quick Alerts
For Daily Alerts
Just In
நக்சலைட்களால் ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்ப்பு-சரக்கு ரயில் கவிழ்ந்தது
பாட்னா: பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ரயில் பாதையை நக்சலைட்கள் குண்டு வைத்துத் தகர்த்தனர். இதனால் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. அந்தப் பாதையில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
ஹாஜிபுர்-முசாபர்பூர் மார்க்கத்தில், குர்ஹானி ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் நக்சலைட்கள் திரண்டு வந்து டைனமைட்களைக் கொண்டு ரயில் பாதையே தகர்த்து சேதப்படுத்திச் சென்றனர். இதனால் அப்பாதை வழியாக வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதன் காரணமாக இன்று காலை 3 மணி முதல் அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்ல வேண்டிய ரயில்கள், ஹாஜிப்பூரிலிருந்து சாபூர்-பத்தோரி நிலையம் வழியாக முசாபர் பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
Comments
Story first published: Monday, November 8, 2010, 12:04 [IST]