Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டதற்கு சிறார்களின் பெற்றோர் வரவேற்பு-மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை: இவ்வளவு சீக்கிரம், கோவை போலீஸார் எங்களது வேதனைக்கு தீர்வு காண்பார்கள் என நினைக்கவில்லை. கமிஷனர் சைலேந்திர பாபு மூலமாக எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. நரகாசுரனான மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்ட இன்றுதான் எங்களுக்குத் தீபாவளி என்று கோவை சிறார்கள் முஷ்கின், ரித்திக்கின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

கோவை சிறார்களை கொடூரமாகக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை கோவை போலீஸார் இன்று அதிகாலையில் என்கவுன்டர் மூலம் வீழ்த்தினர். இதை கோவை சிறார்களின் பெற்றோரான ரஞ்சித் ஜெயின் தம்பதி வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின், ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.

இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும் என்று தெரிவித்தனர்.

மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்:

இதேபோல முஷ்கின், ரித்திக் ஆகியோரது வீடு உள்ள ரங்கே கெளடர் வீதியில் வசிக்கும் மக்கள் மோகன கிருஷ்ணனின் மரணத்தை தீபாவளி போல பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+