மதுரை துணை மேயர் மன்னனின் தாயார் தீயில் கருகி பலி
மதுரை: மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னனின் தாயார் சின்னத்தாய், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மேலப்பொன்னகரம் கார்ப்பரேஷன் காலனியில் வசித்து வருகிறார் மன்னன். இவருடைய தந்தை பாண்டியன் ஏற்கனவே மறைந்து விட்டார். தாயார் பெயர் சின்னத்தாய். 72 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.
மேலப் பொன்னகரத்திலேயே தனி வீட்டில் தனியாக வசித்து வந்தார் சின்னத்தாய். நேற்று காலை தனது வீட்டில் பாய் காய்ச்சியபோது திடீரென அடுப்பில் இருந்த தீ, சின்னத்தாயின் சேலையில் பற்றிக் கொண்டது.
தீ உடல் முழுவதும் பரவவே அவர் அலறியுள்ளார். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்போர் வீட்டுக்குள் புகுந்து சின்னத்தாயை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி சம்பவ இடத்திலேயே கருகி இறந்து போயிருந்தார் சின்னத்தாய்.
இதையடுத்து கரிமேடு போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications