For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம்: 15,000 பேர் தாய்லாந்துக்கு ஓட்டம்

Google Oneindia Tamil News

Myanmar Violence
யங்கோன்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் மியான்மரில் பயங்கர கலவரம் வெடித்ததையடுத்து 15,000 பேர் தாய்லாந்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கொடும் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.

பல முறைகேடுகளுடன் நடந்த இந்தத் தேர்தலில் ராணுவத்துக்கு ஆதரவான கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதையடுத்து ராணுவத்துக்கும், அரசுக்கு எதிராக ஜனநாயகம் தழைக்க போராட்டம் நடத்தும் கரென் புத்திஸ்ட் ஆர்மி அமைப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது.

கரென் மாகாணத்தில் கலவரம் மூண்டதில் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மியான்மரில் மேலும் பல மாகாணங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.

ராணுவத்துடன் கரென் புத்திஸ்ட் ஆர்மி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் மியான்மாரை விட்டு பக்கத்து நாடான தாய்லாந்துக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். இதுவரை சுமார் 15,000 பேர் தாய்லாந்துக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X