பிரபல சென்னை ரவுடி காட்டான் சுப்ரமணியன் மதுரை அருகே வெட்டிக் கொலை
மதுரை: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டான் சுப்ரமணியன் மதுரை அருகே இரண்டு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டான்.
சென்னையில் உள்ள பணக்காரர்களை கடத்தி சென்று பணம் பறிக்கும் கூலிப்படையின் தலைவனாக திகழ்ந்தவன் காட்டான் சுப்பிரமணியம். இவன் மீது 4 கொலை வழக்குகள், 8 கொள்ளை வழக்குகள், ஆட்களை கடத்திச் சென்ற எட்டு வழக்குகளும் இருக்கின்றன.
சென்னையைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஆள் கடத்தல், மிரட்டல், பணம் பறிப்பு போன்றவற்றில் படு சுதந்திரமாக ஈடுபட்டு வந்தவன் காட்டான். இவனை இரண்டு முறை என்கவுன்டர் மூலம் போட்டுத் தள்ள போலீஸார் முயன்றனர்.
ஆனாலும் தப்பி விட்டான்.
போலீஸ் என்கவுன்டர் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருந்தவர்களில் காட்டானும் ஒருவன். இந்த நிலையில் மதுரை அருகே மேலூரில் வைத்து இன்று வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான் காட்டான் சுப்ரமணியன்.
மேலூர் அருகே நைத்தான்பட்டி என்ற இடத்தில் அவன் வந்தபோது திடீரென வழிமறித்த 2 பேர் சரமாரியாக காட்டானை வெட்டித் தள்ளினர். இதில் காட்டான் சுப்ரமணியன் உயரிழந்தான்.
கொலையாளிகளைப் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.