அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை ஒப்படையுங்கள்-இந்து மகாசபை

இதுதொடர்பாக அமைப்பின் தேசியச் செயலாளர் சக்கரபாணி என்பவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 67 ஏக்கர் நிலத்தை சபையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்.
அந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் விருப்பமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் பாஜகவும் வைத்தது. பாஜக உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், உண்மையின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமே ராமர் பிறந்த இடம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு எதுவோ அதை ஏற்று செயல்படுத்துவோம் என்று 1993 ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. அதை தற்போது நிறைவேற்ற வேண்டும். இப்போது ராமர் சிலை வைத்து வழிபடும் இடத்தை ஹிந்து மகாசபையிடம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி அந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், வழக்கு இப்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது குறித்து அவையில் பேசக் கூடாது என்றனர்.












Click it and Unblock the Notifications