நானும், எனது குழந்தையும் வாழ சமுதாயம் உதவ வேண்டும்-மோகனகிருஷ்ணன் மனைவி
கோவை: எனது கணவர் இரக்கமே இல்லாத குற்றவாளி. என்கெளன்டரில் கொல்லப்பட்டிருக்காவிட்டால் அவருக்கு கோர்ட் மூலம் தண்டனை கிடைத்திருக்கும். என்னையும், எனது குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்க வேண்டும். நாங்கள் வாழ உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார் கோவையில் என்கெளன்டரில் கொல்லப்பட்ட மோகனகிருஷ்ணனின் மனைவி.
மோகனகிருஷ்ணனின் செயலால் அவனது குடும்பம் பெரும் இக்கட்டில் மாட்டியுள்ளது. மக்கள் கண்ணில் படாமல் வாழும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மோகனகிருஷ்ணனின் மனைவி பெயர் ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாகவும் உள்ளார் ஆரோக்கிய மேரி.
மோகனகிருஷ்ணனின் நடத்தை பிடிக்காமல் அவர் திருச்சிக்குப் போய் தனது தாயுடன் வசித்து வருகிறார். மோகனகிருஷ்ணன் கொலையான செய்தியை அறிந்து அவர் பெரும் அதிர்ச்சியுற்றுள்ளார்.
கோவைக்கு தனது மகள், தாயுடன் வந்துள்ள அவர் கண்ணீர் மல்க தமிழக மக்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார். அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி. கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளும் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.
என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படாவிட்டால் கோர்ட் மூலம் தண்டனை கிடைத்து இருக்கும்.
இப்போது நானும், என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் நாங்கள் வாழ உதவ வேண்டும் என்று கதறியபடி கூறினார்.
அவருடன் இருந்த தாயார் அந்தோணியம்மாள் கூறுகையில்,
மோகன்ராஜ் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆரோக்கிய மேரி டெலிவிஷனில் பார்த்ததும் மூர்ச்சையாகி விட்டாள் என்றார்.
இதற்கிடையே, மோகனகிருஷ்ணனின் தாயார் சாவித்திரி கேரளாவிலிருந்து கோவை வந்துள்ளார். அவர் மோகனகிருஷ்ணன் சாவு குறித்து பேச மறுத்து விட்டார்.
ஆரோக்கிய மேரியிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்குத் தேவைப்பட்டால் மீண்டும் வர வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications