For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதியூரப்பா உடனே பதவி விலக வேண்டும்-அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள்

By Chakra
Google Oneindia Tamil News

Yeddyurappa
பெங்களூர்: ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழல் புகாருக்கு ஆளான மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் பதவிவிலகியதைப் போல, முதல்வர் எதியூரப்பாவும் விலக வேண்டும் என்று அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஐவரான கோபாலகிருஷ்ண பேலூர், பாலச்சந்திர ஜரிகோலி, சர்வபெளமா பகலி, நஞ்சுண்டசாமி, ராஜு காகே ஆியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எதியூரப்பாவும் ஊழல் புகாருக்குள்ளாகியுள்ளார். தனது மகனுக்கு சாதகமாக நில விற்பனை செய்ய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும், பெலகரே துறைமுகத்திலிருந்து இரும்புத் தாது மாயமான விவகாரத்திலும் அவரது பெயர் அடிபடுகிறது.

மகாராஷ்டிர முதல்வருக்கு பொருந்தும் அனைத்து தார்மீக நெறிகளும் எதியூரப்பாவுக்கும் பொருந்தும். எனவே தார்மீக அடிப்படையில் எதியூரப்பாவும் விலக வேண்டும்.

எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில் சவானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சுஷ்மாசுவராஜும், அருண் ஜேட்லியும் முழங்குவது சரியா என்பதை பாஜகமேலிடம் விளக்கவேண்டும் என்றனர்.

இவர்களை பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு மற்றும் முதல்வர் எதியூரப்பா சார்பாக வாதாட முன்னாள் சோலிசிடர் ஜெனரல் சோலி சோராப்ஜியை பாஜக அழைத்து வந்தது. அவரும் வாதாடி இவர்களை பதவி நீக்கம் செய்தது சரியே என்ற தீர்ப்பைப் பெற்றுத் தந்தார்.

இந் நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிர்பித் எம்எல்ஏக்கள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீது முன்னாள் சோலிசிடர் ஜெனரல் ஹரிஷ் சால்வே வாதாடவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X