தொழில் தொடங்குவது இந்தியாவை விட பாகிஸ்தானில் ஈஸி! - உலக வங்கி
தொழில் தொடங்குவது இந்தியாவை விட பாகிஸ்தானில் சுலபமாக உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உலகின் 183 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 134வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் 80வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் நிறைய தொழில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் தொழில் தொடங்குவது சுலபமாக இல்லை என்று உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது இந்தியாவில் தொழில் தொடங்க.
ஆனால் பாகிஸ்தானில் 21 நாட்களில் புதிய தொழிலைத் தொடங்க முடியும் என்றும், வணிக வரி உள்ளிட்ட நடைமுறைகள் மிக எளிமையாக உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தப் பட்டியலில் சீனா 79வது இடம் வகிக்கிறது.
சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஜஸ்ட் மூன்றே நாளில் புதிய தொழிலைத் தொடங்க முடியுமாம்.
ஹாங்காங்குக்கு இரண்டாவது இடமும், நியூஸிலாந்துக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. பிரிட்டனும் அமெரிக்காவும் முறையே நான்காவது, ஐந்தாவது இடங்களை வகிக்கின்றன.
இருப்பதிலேயே படுமோசமான நிலை ஆப்கானிஸ்தான் மற்றும் பூடானில்தான் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.