பக்ரீத் பண்டிகை-பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக உள்ளது.
பாவூர்சத்திரத்தில் வியாழன்தோரும் இயங்கி வரும் வாரசந்தையில் ஆடுகள் விற்பனையும் உண்டு. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி (பலி) கொடுப்பது வழக்கம். எனவே, செழிப்பாக உள்ள ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பைம்பொழில், பொட்டல்புதூர், சுரண்டை, மேலப்பாளையம் போன்ற பல ஊர்களில் இருந்து கடந்த சில வாரங்களாக நூற்றுக்கணக்கானோர் பாவூர்சத்திரம் சந்தையில் செம்மறி ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
பக்ரீத் பெருநாள் வரும் புதன்கிழமை வருவதால் நேற்று ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. 15 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரம் வரை விற்பனையானது.