கேரளாவில் பஞ்சாயத்து தலைவிக்கு டிரைவராக கணவர்: தம்பதி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பஞ்சாயத்து அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றுபவரின் மனைவி, அதே பஞ்சாயத்துக்கு தலைவராக தேர்வானார்.

கேராளவில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. திருவனந்தபுரம் அருகே பூவச்சல் கிராம பஞ்சாயத்து தலைவராக சுனி என்ற பெண் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஏற்கனவே இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் சுனியின் கணவர் சோமன் ஜீப் டிரைவராக உள்ளார். பஞ்சாயத்து அலுவலக பணிக்காக ஜீப் வழங்கப்பட்டிருந்தாலும் அது பெரும்பாலும் பஞ்சாயத்து தலைவரின் பயணத்துக்கே பயன்படுகிறது. அதனால் சோமன் இப்போது பஞ்சாயத்து தலைவரான தனது மனைவிக்கு ஜீப் டிரைவராக ஆகியுள்ளார்.

இது குறித்து சுனி கூறுகையில்,

நான் பொது வாழ்க்கையில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவும் எனது கணவர் தான் உதவியாக இருந்தார். இப்போது நான் பஞ்சாயத்து தலைவியாகவும், கணவரே எனக்கு டிரைவராகவும் இருப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.

எங்கள் குடும்பம் பராம்பரியமான அரசியல் சார்ந்த குடும்பம். எங்கள் பணியின் மீது நாங்கள் மரியாதை வைத்துள்ளோம். யார் பெரியவர் என்ற கேள்வி எங்களுக்குள் எழ வாய்ப்பே இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+