ஆள் மாறாட்டத்தில் எஸ்.ஐ. கொலை: 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை
அம்பை: ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெற்றிவேல். இவர் ஆள்மாறாட்டத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்த சிவகாமி, அவரது தம்பி கந்தசாமி, உறவினர்கள் மாடசாமி, சுப்பிரமணியன், முருகன், கண்ணன், சுரேஷ், ஐயப்பன், அம்மமுத்து, முத்துராமன், ராதாகிருஷ்ணன், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த கள்ளபிரான், வாகைகுளம் பாண்டி, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 17 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி கலைவாணி வழங்கினார். இதையொட்டி அம்பை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.