108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதே நான்தான்! - அன்புமணி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதே நான்தான். ஆனால் அதை வைத்து பெயரை தட்டிக் கொள்ளப் பார்க்கிறது திமுக என்றார் அன்புமணி ராமதாஸ்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இன்றைக்கு ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பா.ம.க.வை ஒழிக்க பார்க்கின்றன. தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அதனை பார்த்து மற்ற கட்சியினர் பயப்படுகிறார்கள்.

இந்தியாவிலேயே மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூறும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். 15 ஆண்டுகளுக்கு முன்பு 8 கோடி லிட்டர் மது விற்பனையானது. இன்றைக்கு 36 கோடி லிட்டர் மது விற்பனையாகிறது.

நான் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். சிறப்பாக செயல்பட்டதற்காக உலக அளவில் 3 விருதுகளைப் பெற்றுள்ளேன்.

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே நான்தான். கூட்டணியைப்பற்றி நமக்கு கவலையில்லை, மற்றவர்களுக்குத்தான் கவலை. பா.ம.க. தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது...

இந்த முறையாவது வன்னியர் அனைவரும் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். பாமகவுக்கே வாக்களிக்க வேண்டும்", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+