அரசு ஆதரவில் ஐஓசி காலாண்டு லாபம் 17 மடங்கு அதிகரிப்பு!
டெல்லி: இந்தியன் ஆயில் கார்பரேஷன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 17 மடங்கு அதிக லாபம் ஈட்டியுள்ளது. அரசு அளித்த மான்யம் மற்றும் விலைக்கட்டுப்பாடு நீக்கம்தான் இந்த லாபத்துக்கு காரணம்.
ஜூலை-செப்டம்பர் மாதத்தில் ரூ. 5,293.95 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே நேரத்தில் ரூ. 284.36 கோடி லாபம் கிடைத்தது என்று அந் நிறுவனத்தின் சேர்மன் பி. எம். பன்சால் தெரிவித்தார்.
ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்க்கும், ஐஓசி நிறுவனத்திற்கு ரூ. 295.8 லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் ஏரிவாயு விற்பனையில் நிறுவனத்திற்கு ரூ. 17,421 கோடி வருவாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதில் அரசு மான்யமாக ரூ. 7,219.95 கோடி ரொக்கமாக அளித்தது. மேலும், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ரூ.5,806.80 கோடி அளித்ததன. இந்த நிதியாண்டின் முதல் பாதிக்கான நஷ்ட ஈடு கடந்த அக்டோபர் மாதம் கிடைத்தது.
ஆனால் கடந்த ஆண்டு இதே நேரத்தில் எந்தவித மான்யமும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications