For Daily Alerts
Just In
ரஷ்யாவில் லஞ்ச வழக்கில் இந்தியர் கைது : 3 ஆண்டுகள் சிறை
மாஸ்கோ: ரஷ்யாவில் குடியேற்றத்துறை ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.
ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான முறைகளை விரைவில் முடிப்பதற்காக குடியேற்றத்துறை ஊழியருக்கு இந்தியர் ஒருவர் 100,000 ரூபில்ஸ் லஞ்சம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இதன் இந்திய மதிப்பு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 63. இதனை அந்த ஊழியர் ஏற்க மறுத்து போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இந்தியரை கைது செய்தனர். இந்த குற்றத்திற்கு ரஷ்ய சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
Comments
Story first published: Sunday, November 14, 2010, 17:25 [IST]