குளச்சல் அருகே மின்னல் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

குளச்சல்: குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மணல் அள்ளியபோது மின்னல் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

குமரி மாவட்டம் மணவளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்திய அரிய மணல் ஆலை (ஐஆர்இ) செயல்படுகிறது. இங்கு கடல் மண்ணில் இருந்து இல்மனைட் உள்ளிட்ட அரியவகை தாதுக்கள் பிரித்தெடுக்கும் பணி நடக்கிறது.

தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர் தவிர கடற்கரையில் இருந்து மணல் அள்ளும் பணிகளில் கடலோர கிராமங்களை சேர்ந்த ஓப்பந்த தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மண்டைக்காடு புதூரை சேர்ந்த 530 பேர் மணவளக்குறச்சி மணல் ஆலைக்கு ஓப்பந்த அடிப்படையில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் காலை ஷிப்டில் 270 பேரும், மதியம் 260 பேரும் மணல் அள்ளுவது வழக்கம்.

குமரி மாவட்டத்தில் நேற்று பகல் 1 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. 2வது ஷிப்ட் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் மழனையை பொருட்படுத்தாமல் மண்டைகாடு முதல் வெட்டுமடை வரை கடற்பகுதிகளில் குட்டைகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தனர்.

உடனடியாக குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்களை எடுத்து சென்றனர். இதில் மண்டைக்காடு புதூரை சேர்ந்த ரொமால்டு, சவேரியர் பிச்சை, வரிதையா ஆகியோர் இறந்தனர். காயமடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+