செக்ஸ் லீலையில் சிக்கிய நித்தியானந்தாவின் உதவியாளர் கைது

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி நித்தியானந்தாவை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அவர் பெங்களூரை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அவரை இமாச்சல பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும் நடிகை ரஞ்சிதா மட்டும் இதுவரே சிக்கவே இல்லை. அவரை போலீஸார் தேடிக் கொண்டே இருக்கின்றனர். நித்தியானந்தா மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த நிலையில் நித்தியானந்தா வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக கூறி நித்தியானந்தாவின் உதவியாளரான சச்சிதானந்தாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக சிஐடி போலீஸார் கூறுகையில், ஆதாரங்களை அழித்தது தொடர்பாகவும், கிரிமினல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் சச்சிதானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம் என்று சிஐடி தெரிவித்துள்ளது.
பெங்களூர் பிடாதி ஆசிரமத்தில் முக்கியப் புள்ள இந்த சச்சிதானந்தா. நித்தியானந்தாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்தவர்களிடம் கட்டாயப்படுத்தி சில உறுதிமொழிகளை எழுதி வாங்கினார் நித்தியானந்தா என்பது ஒரு புகார். அந்தப் புகாருக்கு ஆதாரமாக விளங்கிய அந்த உறுதிமொழிப் பத்திரங்களை சச்சிதானந்தா அழித்துள்ளதாகவே தற்போது அவர் கைதாகியுள்ளார்.
நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது இந்த சச்சிதானந்தாதான் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சச்சிதானந்தா. 2003ம் ஆண்டு சிகாகோவில் வைத்து நித்தியானந்தாவை சந்தித்து அவருடன் இணைந்து கொண்டார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications