பஞ். ஊழியர் தற்கொலை- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சுரண்டை: சுரண்டை அருகே பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜகோபாலபேரி சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ரத்னசாமி மகன் அருமைராஜ். அங்குள்ள பஞ்சாயத்தில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அருமைராஜ் வீட்டிலிருந்து நெல்லை கலெக்டருக்கு அவர் அனுப்பிய கடிதத்தின் நகல் கைப்பற்றப்பட்டது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,
நான் ராஜகோபாலபேரியில் மக்கள் நல பணியாளராக சேர்ந்து ஒரு வருடமாகிறது. தற்போது வீராணம் கால்வாயில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இங்கு தினமும் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பல முறைகேடு நடந்து வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு இதில் சம்பந்தம் உண்டு. இந்த முறைகேடுகளுக்கு நான் தான் காரணம் என என்னை மிரட்டி கடிதம் எழுதி வாங்கி வைத்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து மோசடி புகாரில் சிக்குவதை விட நானே எனக்கு தண்டனை கொடுக்கும் விதமாக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆதியோர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அருமைராஜை தற்கொலைக்கு தூண்டியதாக பஞ்சாயத்து தலைவர் ஜான், உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று காலை மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் முத்தையா, பிரதிநிதி சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மோகன்ராஜ் உள்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
முன்னதாக ராஜகோபாலபேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications