ராஜினாமாவுக்குப் பின் ராஜா சென்னை வருகை-திமுகவினர் திரண்டு சென்று வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இதையடுத்து நேற்று அவர் சென்னை திரும்பினார். அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அழகிரி ஆகியோருக்கு அளிக்கப்படுவதைப் போல திமுகவினர் திரண்டு சென்று வரவேற்றனர். கிட்டத்தட்ட 5000 பேர் திரண்டதால் விமான நிலையம் கூட்டத்தால் திமிலோகப்பட்டது.
அமைச்சர்கள் மாநில பரிதி இளம்வழுதி, செல்வராஜ், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் ராஜாவை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பெரும் கூட்டமாக இருந்ததால், அவர்களைத் தாண்டிப் போய் ராஜாவை கேள்வி கேட்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் திணறினர்.












Click it and Unblock the Notifications