For Daily Alerts
Just In
நொய்டா சைக்கிள் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ
நொய்டா: நொய்டா பேஸ்-2 வர்த்தக பகுதியில் உள்ள சைக்கிள் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
நேற்றிரவு 8 மணி அளவில் ஹோசியரி காம்பிளக்ஸ் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திடீர் என்று தீ பிடித்தது. உடனே 10 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமான இடத்திறக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்தில் சில தொழிலாளர்களுக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர்கள் கூறினார்கள்.
Comments
Story first published: Thursday, November 18, 2010, 11:55 [IST]