சூகியிக்கு மியான்மர் ராணுவத்தில் ஆதரவு நிலவுகிறது-பிபிசி
லண்டன்: மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியிக்கு மியான்மர் ராணுவத்தில் ஆதரவு கிளம்பியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
7 ஆண்டு கால வீட்டுச் சிறைவாசத்திற்குப் பின்னர் கடந்த வாரம்தான் விடுதலை செய்யப்பட்டார் சூகியி. இந்த நிலையில் மியான்மரை கையில் வைத்துள்ள ராணுவத்தில் தற்போது சூகியிக்கு ஆதரவாக குரல்கள் எழும்பியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
ராணுவத்தின் கீழ் மட்ட அளவில் சூகியிக்கு ஆதரவு கிளம்பியுள்ளதாக அது கூறியுள்ளது. ராணுவத்தின் 2 பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், சூகியி விடுதலை செய்யப்பட்டபோது அவரைக் காண சென்றிருந்ததாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
சூகியைக் காண சென்ற பிரிவுகள் ரங்கூன் மற்றும் பகோ டிவிஷன் என்றும் தெரிய வந்துள்ளது. ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக சூகியி தொடர்ந்து தீவிரமாக போராட வேண்டும் என்று இந்த பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் விரும்புகின்றனராம்.












Click it and Unblock the Notifications