ஸ்பெக்ட்ரம் எதிரொலி: சென்செக்ஸில் இன்று 345 புள்ளிகள் சரிவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸில் இன்றும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலையிலேயே சரிவுடன் துவங்கிய வர்த்தகம், மாலையில் 345.20 புள்ளிகள் சரிந்த நிலையில் முடிவுக்கு வந்தது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணமாக ஏற்பட்டுள்ள நிலையற்ற அரசியல்தன்மையே இதற்குக் காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்செக்ஸ் பங்குகளில் நான்கைத் தவிர, மற்ற எல்லாமே நஷ்டத்தைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 19,585.44 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி108 புள்ளிகள் குறைந்து 5890.30 ஆகவும் நிலைப்பெற்றது.












Click it and Unblock the Notifications