ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ சார்பில் கே.கே.வேணுகோபால் ஆஜராவார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் சார்பில் ஆஜராகும் சட்ட நிபுணர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரும் மாற்றப்பட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சிபிஐ சார்பில் ஆஜராகவுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலுடன் சேர்ந்து வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜராவார்.
அரசின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனியார் வக்கீலான வேணுகோபாலை அரசு நியமித்துள்ளது.
ஏற்கனவே பிரதமர் சார்பில் ஆஜராகி வந்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மாற்றப்பட்டு தற்போது அட்டர்னி ஜெனரல் வாகனாவதி அந்த வழக்கில் ஆஜராகிறார்.
கோபால் சுப்ரமணியம் தற்போது தொலைத் தொடர்புத்துறை சார்பில் மட்டும் ஆஜராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications