பிரதமர், சோனியா குடும்பம் மீது அவதூறான புகார்கள்-சாமி மீது வழக்கு போடுகிறது காங்.

Subscribe to Oneindia Tamil

Subramaniam Swamy
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி குடும்பத்தார் மீது அவதூறான புகார்களைக் கூறி வரும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மீது வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்யூனிகேஷன் இணை அமைச்சருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சாமி கூறி வரும் அனைத்துப் புகார்களும் ஆதாரமற்றவை, தேவையற்றவை. குறிப்பாக பிரதமர் மீது அவர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என்பதோடு அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.

நடந்த சம்பவம் (ஸ்பெக்ட்ரம்) 2007ல் நடந்துள்ளது. எனவே இப்போது அமைச்சராக உள்ள நான் அதுகுறித்து கருத்துக் கூற முடியாது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாககருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.

அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தை கடந்த 20 வருடங்களாகவே விமர்சித்துக் கொண்டிருக்கிறார் சாமி. இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். இதுகுறித்து சட்ட ஆலோசனையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

அரசியல் ரீதியாக உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் சாமி. அப்படிப்பட்டவரை சட்ட ரீதியாகத்தான் ஒடுக்க வேண்டும். அதை விரைவில் சாமி எதிர்கொள்ள தயாராக இருக்கட்டும் என்றார் பைலட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+