இன்னும் சில மாதங்களில் தலாய் லாமா ஓய்வு: மக்கள் விரும்பினால் அடுத்த தலைவர் பற்றி கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னும் சில மாதங்களில் தான் ஓய்வு பெறப்போவதாக திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

சிஎன்என்-ஐபிஎன் டிவியில், கரண்தாபரின் டெவில்ஸ் அட்வகேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தலாய் லாமா.

அப்போது அவரிடம் இன்னும் 6 மாதங்களில் நீங்கள் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறப்போவதாகச் செய்திகள் வருவது பற்றி கேட்டனர். அதற்கு அவர் அவ்வளவு நாள் நீடிக்காது அடுத்த சில மாதங்களில் கூட ஓய்வு பெற்று விட்டாலும் விடுவேன் என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் தலைவர்களுக்கு இது பற்றி ஏற்கனவே மறைமுகமாகத் தெரிவித்துள்ளேன். இனி முறைப்படித் தெரிவித்து அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்வேன்.

திபெத்தியர்கள் கடந்த 2001-ம் ஆண்டிலேயே வெளிநாடுகளிலிருந்து போட்டி நாடாளுமன்றத்தை அமைத்து பல்வேறு முடிவுகள் எடுத்து வருகின்றனர். எனவே, எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் விவாதித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். அதை நான் பின்பற்ற வேண்டும். இதுதான் இன்று வரை கடைபிடிக்கப்படும் நடைமுறை.

ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதில் நான் மேல்அதிகாரம் செலுத்துவதில்லை. நான் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இந்த நடைமுறை தான் பின்பற்றப்படும்.

மக்கள் விரும்பினால் எனக்குப் பின் யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று நான் கூறுவேன் என்றார் லாமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+