ஸ்பெக்ட்ரம்-எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச பிரணாபுக்கு காங். உத்தரவு

நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான அதிகாரம் பிரணாபுக்கு வழங்கப்பட்டது.
கடந்த இரு வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஒருஅலுவலும் நடக்காமல் உள்ளது.
இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் உயர் மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இதில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி மீண்டும் பேசுவது என முடிவானது.
கூட்டத்தில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரணாப் பேசவுள்ளார். அதன் பின்னர் அவர்கள் சொல்வதை சோனியாவிடம் கூறுவார்.
சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணைக்கு காங். உடன்பாடு?
இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை என்பதிலிருந்து விலகி, சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பிலான சிபிஐ விசாரணையை நடத்த காங்கிரஸ் இறங்கி வரலாம் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வரும்போது உச்சநீதிமன்றமே இந்த திட்டம் குறித்து அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது குஜராத்தில் சோராபுதீன் போலி என்கவுன்டர் உள்ளிட்ட வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் எஸ்ஐடி மற்றும் சிபிஐ ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கையும் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும் என்று தெரிகிறது. ஜேபிசி விசாரணை தேவை என்ற எதிர்க்கட்சிகளின் நெருக்குதலிலிருந்து தப்பிக்க மத்திய அரசு இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை உச்சநீதிமன்றம் தனது கண்காணிப்பிலான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸ் அரசு உடன்பட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மட்டுமல்லாமல் இடதுசாரி கட்சிகளும் ஜேபிசி விசாரணையை மட்டுமே ஏற்போம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications